பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் மரம் வெட்டி ராமதாஸ் ஆக இருந்து இன்று மருத்துவர் ஐயா ஆக வளர்ச்சி பெற்று இருக்கிறார்.
புரட்சிதலைவி ஜெயலலிதா அவ்வப்போது மட்டும் பொதுமக்கள் மத்தியில் தலை காட்டுகிறார். விஜயகாந்துக்கு, குடிகாரன் என்ற பட்டத்தை எதிர்த்து அறிக்கை விடவே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் கிரிக்கெட் ஆரம்பித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்தையும் எதிர்த்து நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்டமும் நடத்தி வருகிறார்.
சிறப்பு பொருளாதர மண்டலமோ, ரிலையன்ஸ் ரீடெயிலோ, விமான நிலைய விரிவாக்கமோ - அவை சரியா, தவறா என்பது வேறு விஷயம் - மருத்துவர்
ஐயாவின் அறிக்கையும் போராட்டமும் இல்லாமல் அவை நடப்பது இல்லை (நிற்பது இல்லை - விமான நிலைய விரிவாக்கம் நடக்கவே நடக்காது என்று
நினைக்கிறேன்).
என்னை பொறுத்த வரை இதன் அர்த்தம்:
மருத்துவர் ஐயா போராட்ட அரசியலை கையில் எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டோரின் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக் கொள்வதன் மூலம், தன்னுடைய ஓட்டு வங்கியை விரிவு படுத்தும் முயற்சி. இது ஒரு திட்டமிட்ட அரசியல் முடிவாக இருக்கலாம். மரம் வெட்டி, சில மனிதர்களையும் வெட்டி, பாட்டாளி மக்கள் கட்சி தன்னை பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சக்தியாக வெளிப்படுத்தி நிலைநிறுத்தி கொண்டது. ஆனால், கடந்த 10 அல்லது 15 வருடங்களில் ஏதும் பெரிய முன்னேற்றம் கிடையாது.
மருத்துவர் ஐயா இப்போது அடுத்த கட்டத்துக்கு போக ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் விளைவுதான் அரசின் இலவச திட்டங்களை தவிர அனைத்து பிற திட்டங்களையும் எதிர்க்கும் முடிவு. விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்தால் ஒரு தொகுதி. துணை நகர திட்டத்தை எதிர்த்தால், ஒரு தொகுதி என்ற கணக்காக இருக்கலாம்.
இந்த பாணி அரசியல் போணி ஆகும் என்றுதான் தோன்றுகிறது.
இதை அப்படியே இன்னும் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தாலோ அல்லது அந்த காலத்தில் தி.மு.க - வுக்கு, ஒரு இந்திப் பிரச்சினை மாதிரி ஒரு பற்றி எரியும் பிரச்சினை பா.ம.கு-வுக்கு கிடைத்தால் இன்னும் சீக்கிரமாகவோ, மருத்துவர் ஐயா தன் மகனையோ அல்லது மகளையோ (தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது இப்போது கற்றுக் கொண்டு விட்ட) அல்லது பேரனையோ தமிழக முதல்வராக்கி விடலாம் என்றுதான் தோன்றுகிறது.


0 comments:
Post a Comment