வேற்றுமையில் ஒற்றுமை
இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பள்ளியிலேப் படித்தது.
எத்தனை மொழிகள்? எத்தனை மதங்கள்? மறக்க முடியாதபடி எத்தனை சாதிகள்?
அதே நேரத்தில் எத்தனை சண்டைகள்?
யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவில் நம்மை விட அதிகமாக வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுகிறார்கள் எனத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கு முன்பே தலித்துகள் போராட ஆரம்பித்தும் நம்மால் இன்னும் இரட்டை டம்ளரை டீக்கடையில் ஒழிக்க முடியாத பொழுது, 1960-களில் தீவிரமடைந்த போராட்டத்தின் மூலம் கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை மிக வேகமாக குறைக்க முடிந்த்தது ஒரு சாதனை.
கறுப்பின மக்களின் பொருளாதர நிலையில் இன்னும் நிறைய முன்னேற்றம் வேண்டும் என்பது உண்மைதான். சில இடங்களில் அவர்களுடைய நிலை
மோசம்தான். ஆனால், அவர்களை யாராலும் பொது இடத்தில் வெளிப்ப்டையாக அவமானப்படுத்த முடியாது. That is politically incorrect. எல்லா பொது கட்டிடங்களிலும் இந்த கட்டிடத்தில் அனைவரும் நுழைய அனுமதி உண்டு. நிறம் மற்றும் இனத்தின் அடிப்படையில் யாரையும் பாகுபடுத்த கூடாது என்ற அறிவிப்பு காணப்படும்.
அடிமை முறையை ஒழிக்க முற்பட்ட பொழுது, தனி நாடு கேட்டு தென் பகுதி மக்களால் மக்களால் போராட்டங்கள் தொடங்கப் பட்டன. அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய தலைவர்களைப் பெற்ற பெருமை உடைய நாடு அது. இரட்டை டம்ள்ரை எதிர்த்தால், அந்த கிராமத்தின் 500 ஒட்டு போய் விடும். எதிர்க்காவிட்டால் 100 ஓட்டுதான் போகும் என்று கணக்கு போடும் தலைவர்களைப் பெற்றப் பெருமை உடைய நாடு நமது.
வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் மட்டில்லை. இந்தியர்கள், சீனர்கள், மெக்சிகோ, பாகிஸ்தானியர், அரபு நாட்டினர் அனைவரையும் உள்ளடக்கிய நாடு
அது. அங்கே இல்லாத இனம் ஒன்று சொல்லுங்கள் என்றால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டும். நம் நாட்டை விட நிறைய கலாச்சாரங்கள் நிறைந்த நாடு அது. முற்றிலும் வேறு பட்ட கலாச்சாரத்தை உடைய மக்கள் நிறைந்த நகரங்களை உடைய நாடு அது.
கடைசியாக அங்கே நடந்த பெரிய இனப் பிரச்சினை எது என்று யோசித்தால், 15 வருடங்களுக்கு முன்பு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்தான் ஞாபகம்
வருகிறது. நம் நாட்டில் தினம் ஒருவரையாவது சாதிப்பிரச்சினையால் வெட்டாத நாள் உண்டா? கோத்ரா போன்ற கலவரங்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையேனும் நடக்கிறது.
எனக்கு என்னமோ வேற்றுமையில் ஒற்றுமைக்கு அமெரிக்காதான் நல்ல உதாரணம் எனத் தோன்றுகிறது. வேற்றுமைகள் நிறைந்த நாடு என்ற பெருமையை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம்.

